தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National Forum > Selected Writings - M.Thanapalasingham >

Tamil National Forum
TAMIL NATIONAL FORUM

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

'I have but a feeble and weak body and lack the courage and commitment required for membership of the LTTE. To be eligible for membership of the LTTE requires a level of determination and fearlessness that cries out 'I will not lose my freedom except with my life'. This I do not have. No, I am not a member of LTTE.... No, I have not met Pirabaharan. Like millions of Tamils living in many lands and across distant seas, I do dream of meeting him one day. To meet him so that I could bow my head in front of him and with all humility say to him: 'Thank you, thank you for restoring our dignity. Because of you, we Tamils are walking with our heads held high'. This is my dream. .' - An Australian Tamil Stands Up for that which he believes..., 31 May 2001

 
4 November 2007தமிழ்ச்செல்வனின் சிரிப்பு மலர்ந்துகொண்டிருக்கும் தமிழீழத்தின் சிரிப்பு
8 July 2007தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டதின் சமகால நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளல்

"...அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் ஒருபுறம் இந்தியா ஒருபுறும், சீனா ஒருபுறம், பாகிஸ்தான் ஒருபுறம், இவர்கழுக்கிடையிலான ஒட்டுறவுகள் முரண்பாடுகள் என்னும் கலப்புக்கள் ஒருபுறம் என சமகாலம் விரிகின்றது.  இவற்றின் சூட்சுமங்களை, இவர்களால் அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் நடவடிக்கைகள், கருத்துக்கள் என்பவற்றின் பின்னால் வெளிப்படுத்தப்படாதவற்றை, சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின் எமக்கு இவைபற்றிய வாசிப்புக்களும் கருத்துப்பரிமாற்றங்களும் அவசியமாகும். .."

4 June 2007தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி - ஐ.நா வை நோக்கிய தமிழர் பேரணி
8 April 2007சிட்னி தமிழ் அறிவகத்தால் நடாத்தப்பட்ட வசந்த மாலை 2007 இல் ஆற்றிய உரை
30 March 2007மாமனிதர் தில்லைநடராஜா ஜெயக்குமார் - உன் நண்பன்,   தனபால்
11 February 2007தமிழ்த் தேசியமும் தனிதாயகம் அடிகளாரும்
15 December 2006தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவாக
2 December 2006சுதந்திர தாகம் – விண்ணுலகிலும் மண்ணுலகிலும் சில காட்சிகள்
28 November 2006சிட்னி,  அவுஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்ற மாவீரர் விழாவில் ஆற்றிய சிறப்புரை.
23 July 2006சாவிலும் வாழ்வோம் கறுப்பு யுலை நினைவு கூர்வு
22 April 2006வசந்த மாலை கலை நிகழ்ச்சி
16 March 2006காரைக்காலம்மையார் ஒரு பன்முகப்பார்வை

"பிரச்சனைகளை எதிர்நோக்கியபோது அம்மையார் செயல்பட்ட விதங்கள், சைவ பத்தி இயக்கத்திற்கு முன்னோடியாக சிவனை முழுமுதற் கடவுளாக பாடிய பாடல்கள், சிவதாண்டவம் பற்றிய கருத்தாக்கங்கள், இலக்கிய வடிவங்கள், என பரந்துபட்ட துறைகள் எல்லாவற்றிலும் காரைக்காலம்மையார் ஒரு முன்னோடி. அக்காலச் சூழலில் வைத்து நோக்கும்போது அவர் செய்தது ஒரு தனிமனிதப் புரட்சி எனலாம்..."

16 March 2006 தமிழ் ஈழ தன்னாட்சிக்கான கட்டுமானங்கள்
3 March 2006தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் பயங்கரவாத முத்திரையும்
24 December 2005இடையறாத முயற்சியே தவமெனப்படுவது

சிட்னி அவுஸ்திரேலியாவில் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களது இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் அனைத்துலகத் தேடல் என்னும் நூல் வெளியீட்டில் ஆற்றிய தலைமையுரை.

11 October 2005மாணிக்கவாசகரின் யாத்திரை

"...சம்பந்தர் அப்பரைவிட இறைவனிடம் நெருங்கிய உறவைப் பாடுகின்றார். சுந்தரர் ஒருவிதமான பரிகாசத்துடன் இறைவனை தோழனாகக் கண்டு பாடுகின்றார். மாணிக்கவாசகரோ ஒரு காதலியின் விரகதாபத்துடன் தன்னை இழந்து, முற்றாகப் பறிகொடுத்த நிலையில் பாடுகின்றார்...அவர் தும்பியை நோக்கி " தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாது " பேரின்பதேனை உண்ணுவாயாக எனப் பணித்ததை ஏற்று நாமும் திருவாசகம் என்னும் தேனை அருந்தி மகிழ்வோமாக." more

2 October 2005எமது போராட்டம் நீதியானது, நியாயமானது,  தர்மத்தின்பாற்பட்டது

" எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்கி தர்மம் நலிவுறுகின்றதோ அப்பொழுதெல்லாம் நான் வருவேன் " என்றான் கீதாசிரியன். அவன் வரக்காணோம். ஆனால் எம் உடன்பிறப்புக்கள் ஆணாகப் பெண்ணாக விடுதலைப்படையாக ஈற்றில் அடிபணியமறுக்கும் தேசமாக அவதரித்துச் சென்ற எம் மண்ணும் இந்தப்போராட்டத்தை ஒரு யோகமாக தவமாக அவர்கள் வரித்துக் கொண்டுள்ளமையும் எமது மக்களை ஆகர்சித்துக் கொண்டுள்ளதன் வெளிப்பாடுகளில் ஒன்றே பொங்கு தமிழ் எழுச்சிகளாகும்..."

2 July 2005மானிடம் தழுவிய ஆழ்வார்கள்

" நாலாயிர திவ்வியபிரபந்தத்தை வெறும் பத்தி இலக்கியமாக மட்டும் வாசியாது, அவற்றை சமூக அறிவியல் பின்னணியிலும் வாசிக்கும் போதே ஆழ்வார்களின் மனிதநேயத்தை, மானிடம் தழுவிய பார்வையை முழுதாக தரிசிக்க முடியும்."

3 May 2005சிவராமுடன் (தராக்கி) ஒரு நாள்
2 March 2005இப்சனின் (Ibsen's) நோர்வே

"1905இல் நோர்வே தன்னிச்சையாக சுவீடனில் இருந்து தனது தொடர்பை துண்டித்தது. பிரித்தானியரின் தலையீட்டாலும் சுவிடன் மன்னனின் நிலைப்பாட்டாலும் யுத்தமின்றி நோர்வே பிரிந்தது. இவ்வாண்டு 100 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. சுவீடனும் இதில் கலந்து கொள்ள உள்ளது.பலாத்காரமான ஒரு இணைப்பால் அல்லல் உறும் ஈழத்தமிழ் மக்களும் பல வேதனைகளைப்பட்டு களைத்துப் போய்விட்டார்கள். இப்சனின் நோறாவைப் போல் கதவை அடித்து அவர்கள் வெளியேறும்போது நோர்வே அதை ஏற்று உலகின் மனச்சாட்சியை உலுப்பும் என தமிழ் மக்கள் எதிர்பார்கின்றனர்..." more

20 February 2005விழுதாகி வேருமாகி .....போரியல் பதிவுகள் - Book Review

"..தமிழ் ஈழமக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் புறநிலைக்காரணிகளால் வடிவெடுத்த ஆயுதப்போராட்டத்தின் போரியல் பதிவுகளாக 2ம் லெப்.மாலதி படையணியின் விழுதாகி வேருமாகி என்னும் போர்க் காவியம் போரியல் பதிவுகள் தமிழ் மொழிக்கு, புதியவை. போரின் நாயகர்களான போராளிகளினால் எழுதப்பட்டது என்ற புதுமை ஒருபுறம், அதுவும் பெண்கள் படை அணியின் போரியலை, போர் நிகழ்வுகளை பெண் போராளிகளே எழுதியுள்ள அற்புதம், விழுதாகி வேருமாகி என்னும் நூலாகும்..."

16 February 2005

கௌசல்யன் வாழ்கிறான்

"அன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன்... அவன் மரணம் தமிழர் தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்னும் தாரகமந்திரங்களின் மூச்சாகி விட்டன. இதுவரை வன்னி வந்த சர்வதேசம் இன்று கொக்கடிச்சோலைவரை வந்துவிட்டது. தமிழ் முஸ்லீம் சகோதரங்கள் விடுதலைப்புலிகளின் தியாகங்களை உள்வாங்கி நேசக்கரம் நீட்டியுள்ளனர். புலம் பெயர்ந்த அவன் உறவுகள் மேலும் உறுதிகொண்டு நிற்கின்றனர். சேக்ஸ்பியர் கூறியதுபோல்..... ”....He lives, he wakes, 'tis death is dead, not he.." கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல..."

 

30 January 2005 மொழி ஒரு தேசியத்தின் மூச்சு..... அயர்லாந்து மக்களின் போராட்டத்தில் இருந்து ஒரு பார்வையும் சில பதிவுகளும்...

" பனையின் கீழ் வாழ்ந்தவர்கள் பனியின் கீழ் பெறும் அனுபவங்களும், போராளிக்கலைஞர்களின் ஆக்க இலக்கிய படைப்புக்களும் எமது மொழிக்கு புதியவை. இவற்றை உள்வாங்கி தமிழ் தேசியத்தின் மூச்சாக விளங்கும் எமது மொழி இன்றைய உலகமயமாக்கலுக்கும், வணிகமொழிக்கும் முகம் கொடுக்க நாம் உழைத்திடவேண்டும்.  " நன்மையும் அறிவும் எத்திசைத்தாயினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீராயின் அச்சமொன்றில்லை.." என்ற பாரதியின் குரல் என் காதில் விழுகின்றது. "

[English Translation by Phillip Pragasam “Language is the very life breath of a nation…” Some Reflections from the struggle of the Irish People]

17 January 2005சாகாவரம் பெற்ற அமெரிக்க சுதந்திரப் பிரகடனமும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டமும்

"அமெரிக்க சதந்திர பிரகடனத்தின் தர்மமே தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம். அமெரிக்க மக்கள் சுதந்திரம் பெற்றமைக்கு இந்த தர்மமே காரணம். ஈழத் தமிழ் மக்களும் வெற்றி பெறுவர் ஏனெனில்...

"தார்மீக அடிப்படையில் நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனி அரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது " தமிழ் ஈழ தேசியத்தலைவர் திரு வே. பிரபாகரன்.

"தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும் எனு மியற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்......" பாரதி

எமது போராட்டத்தின் தர்மம் அது தரித்துள்ள காண்டீபம் காலத்தை மாற்றிக்கொண்டிருக்கும் காட்சிகள் எம் கண்முன்னே விரிகின்றது."

11 January 2005

சுனாமி அனர்த்தமும் கொபி அனான் போக முடியாமல் போன தேசமும்

"ஞாயங்கள் என்ன சொல்கிறது? விழ விழ எழும் உறுதிகள் என்ன சொல்கிறது? பதியொடு படரா மக்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இந்த அனர்தத்தால் மேலும் உறுதி கொண்டு நிற்கும் செயல்பாடுகள் எதைக் கூறுகின்றது? இன்றோ இந்த பிணைப்பில் புலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறையும் தம்மை இணைத்துக்கொண்டுள்ளமை எதைக் காட்டுகிறது? இதுதான் தமிழ் தேசியம்... ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் நாயகத்தை நாம் வரவேற்க அந்த சபையில் தமிழர் தேசம் தொங்கிக்கொண்டு இருப்பதால் முடியாது. அவர் அடுத்தமுறை வரும்போது தமிழர் தாயகத்திற்கு வருவதை யாரும் தடுக்காது அவராக வரும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும். அந்த வருகை அழிவைப் பார்வையிட அல்ல. அழிவில் இருந்து கட்டப்பட்ட ஆக்கத்தை பார்த்து வாழ்த்துவதாக இருக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் சங்கல்பமாகும். ஏனெனில்......

" இலட்சியத்தால் ஒன்றுபட்டஇ எழுச்சி கொண்ட மக்களை, எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது " தமிழ் ஈழ தேசிய தலைவர் திரு வே. பிரபாகரன். "

 

5 January 2005 பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

"இயற்கையின் ருத்திரதாண்டவத்தில்கூட அரசியல் லாபம் தேடும் சிங்கள அரசின் பிரதான அங்கமாக சிங்கள பத்திரிகையாளர்களும் சிங்கள ஊடகங்களும் செயல்படுவது தமிழருக்கு தெரியாத ஒன்றல்ல. இருந்தாலும் மற்றையவர்களைப் போலன்றி டயான் யெயதிலகா பச்சையாக இனவெறி கக்கவில்லை. இவரது மெத்தபடிப்பு இதற்கு காரணமாகலாம். இயற்கையின் அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்ககப்பட்ட தமிழ் மக்களும் இத்தேசத்தவரே என்ற அடிப்படையில் சிங்கள அரசு நிவாரண பணிகளை மேற்கொள்க வேண்டும் என்ற பாணியில் இவர் எழுதி இருப்பது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுததற்கு ஒப்பாகும்..."

1 January 2005புத்தாண்டும் புதுயுகமும்

"...இன்று பாரதியின் சபதங்களும், பாரதிதாசனாரின் கனவுகளும் ஈழத்தமிழ் மண்ணில்தான் புதுயுகம் ஒன்றிற்கான களத்தினை அமைத்துவிட்டு இருப்பதை காண்கின்றோம்... ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் வீரமும், தன்னம்பிக்கையும், கொண்ட மக்கள் கூட்டம் தமிழ் மக்களிடையே வலம்வருவதை காண்கின்றோம். இவர்களே புதுயுகத்தின் மாந்தர்கள். போரும் புலம்பெயர்வும் பல இழப்புக்களுடன் கூடியதாயினும் அது புத்தாயிரத்தில் தமிழர் வல்லபங்களை உலகிற்கு பறைசாற்றி நிற்கும் வீரயுகமாக விளங்குகின்றது..."

15 December 2004இந்தியாவும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய போராட்டமும் – பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்

"இந்தப் போராட்டம் The Hindu  பத்திரிகை கூறுவது போல் சலுகைகளுக்கான போராட்டமல்ல. இந்திய ஆட்சியாளர்கள் எண்ணுவது போல் இதற்கான தீர்வு அதிகார பரவலாக்கமோ மட்டுப்படுத்தப்பட்ட அல்லது ஆகக்கூடிய சுயாட்சியுமன்று. சுயநிர்ணயத்தை கூட்டவோ குறைக்கவோ மட்டுப்படுத்தவோ முடியாது.ஏனெனில் இந்தப் போராட்டம் அந்நிய சிங்கள ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான சுதந்திரப் போராட்டமாகும். இதனை எந்த வழியிலாவது அடைந்தே தீருவோம் என்பதில் தமிழ் மக்கள் உறுதியுடன் இருக்கின்றனர். இதற்காக அவர்கள் கொடுத்த விலைகள் ஏராளம். "

India and the Struggle for Self Determination of the Eelam Tamil People - I dare to speak the unspeakable - English Translation by Phillip Pragasam

14 November 2004At Leader for all Seasons Book Release

"..வரலாறு என்பது தன்னியக்கம் உடையதன்று. வரலாற்று மாற்றத்திற்கு தனிமனிதர்களின் குறுக் கீடு அவசியமாகின்றது. இதனால்தான் பெரும் புரட்சிகளை விடுதலைப் போராட்டங்களை சமுதாய மாற்றங்களைப்பற்றி நாம் பேசிக்கொள்ளும் போது அவற்றை முன்னின்று நகர்த்திய ஆற்றல் மிக்க ஆளுமை மிக்க தனித்துவம் மிக்க தனிமனிதர்களைப்பற்றிப் பேசிக்கொள்கிறோம். இன்றும் இங்கு அதற்காகவே கூடியிருக்கிறோம்..."

31 August 2004On S.PO - S.Ponnudurai

" S. Ponnudurai (S.PO) the writer (short stories, novels, dramas, essays etc) recently published his autobiography -Varalaatril Vaalthal -Living Through History about 2000 pages). This book was officially launched in Sydney on 28th August 2004. The style and the manner in which the book is written is new to Tamil writing. It records, among other things:  * the birth of the Tamil Progressive Writers Movement in Eelam , it's true pioneers and, its failures; * the cruel impact of the Jaffna caste system on his personal life, (the flip side of Aarumuga Naavalar) ; * Hindutthuvam vs :Thamilthuvam; * the folly of the Dravidian movements with regard to Tamil prose and creative writing; ..."

  
Mail Usup- truth is a pathless land -Home